தோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்

  வெங்கட் சாமினாதன் தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சமீபத்து நிகழ்வுகள் என்று தான் சொல்லவேண்டும். இரண்டும் முரண்பட்டவை. இரண்டு வேறுபட்ட முகங்களைக் காட்டும் நிகழ்வுகள். இவ்விரண்டையும் ஒன்றாக்கிப் பார்க்கச் செய்வது இந்த முரண் நகை தான். ஒன்று, மீனாக்ஷ¢புரம் என்ற கிராமத்தின்  பிற்படுத்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட அந்த கிராம … Continue reading

>சங்கிலி – வண்ணதாசன்

> வண்ணதாசன் ‘புள்ளை கழுத்தில சங்கிலி கிடக்கான்னு பாருங்க ‘ ‘– பஸ்ஸை விட்டு இறங்கியும் இறங்காமலும் சொன்னாள். இறங்குகிற கூட்டத்தின் கடைசி ஆள் தரையில் காலை வைப்பதற்குள்ளாகவே மூன்று நான்குபேர் பஸ்ஸிற்குள் தங்களைத் திணித்துக்கொண்டிருக்க, குழந்தையும் கையுமாக விலகி வந்து வந்து நின்றவன்– ‘இந்தா, நீயே பாத்துக்கோ ‘ என்று கொஞ்சம் கோபமாகவே அவளிடம் குழந்தையை நீட்டினான். குழந்தை அதன் நான்கைந்து வயது உற்சாகத்துடன், கூட்டத்தை, பஸ்ஸை, இரைச்சலை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கழுத்தில் … Continue reading

>மாடன் மோட்சம்-ஜெயமோகன்

>  ஜெயமோகன் ஆடிமாதம், திதியை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சுடலைமாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ் கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு ஒலிக்கப் புறப்பட்டது. சேரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒரு பயலுக்காவது இப்படி ஒரு தெய்வம், நடுராத்திரி மையிருட்டில் பசியும் பாடுமாக அல்லாடுவதைப் பற்றிய பிரக்ஞை இல்லை. ‘வரட்டும் பாத்துக்கிடுதேன் ‘ என்று மாடன் கறுவிக்கொண்டது. இந்தக் காலத்தில் … Continue reading

>கடல்புரத்தில் – வண்ணநிலவன்

> வண்ணநிலவன் ஊரிலே என்ன நடந்தால் தான் என்ன? அறுப்பின் பண்டிகை வந்துவிட்டது. கோயில் முன்னே இருக்கிற உயரமான கொடிக் கம்பத்தில் சிவப்புப் பட்டுத்துணியில் காக்காப் பொன்னிழைகள் பதிக்கப்பட்ட கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் ஆராதனைகள் நடந்தன. அனேகமாக எல்லா வீடுகளிலும் விருந்தினர்கள் நிரம்பியிருந்தார்கள். பக்கத்து ஊர்களில் கல்யாணமாகியிருந்த பெண்கள் தங்கள் கணவன் வீட்டாருடன் வந்து விட்டார்கள். எல்லோரையும் முகம் கோணாமல் உபசரிக்கிறது எப்படியென்று அந்த ஊர்ப் பெண்களுக்குத் தெரியும். போன வருஷம் பண்டியலுக்கு … Continue reading

>அரிசி – நீல. பத்மநாபன்

> நீல. பத்மநாபன் சற்றுத் தொலைவில் நீரில் துடுப்புகள் சலசலக்கும் ஓசை… காலூன்றி நின்ற வையத்திலும், அண்ணாந்து பார்த்த வானிலும் இருள்தளம் கெட்டி நிற்கையில், விருட்சங்களுக்கு மட்டும் எப்படித் தோற்றம் இருக்க முடியும்? மண்ணிலும் காற்றிலும் ஈரம் சொட்டுகிறது. அடுத்த மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம்… மேற்குவான்மூலையில் அடிக்கடி மின்னலின் மின்சார வீச்சு… அதோடு இடியோசையும் சடசடவென்கிறது. நெய்யாற்றில் மழை வெள்ளம் குமுறிக் கொந்தளித்து, ஆர்ப்பரித்து ஓடி, இங்கே பூவாறில் வந்து சேருகையில் சமுத்திரம் போல், பரந்து … Continue reading

>ஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்

> வைக்கம் முகம்மது பஷீர் தமிழில்: குளச்சல் மு. யூசுப் மகர1 மாதம் 8ஆம் தேதி. இன்று எனது பிறந்த நாள். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து, குளிப்பது போன்ற காலைக் கடன்களை முடித்தேன். இன்று அணிவதற்காகவென்று ஒதுக்கிவைத்திருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையையும்  வெள்ளைக் கதர் வேட்டியையும் வெள்ளை கேன்வாஸ் ஷ¨வையும் அணிந்து எனது அறையில் சாய்வு நாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் மல்லாந்து படுத்திருந்தேன். என்னை அதிகாலையிலேயே பார்த்தது, பக்கத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பி.ஏ. மாணவனாகிய மாத்யூவுக்கு … Continue reading

>பிரிவுகள் – கலாப்ரியா

> கலாப்ரியா பிரிவுகள் நாளை இந்தக் குளத்தில் நீர் வந்து விடும் இதன் ஊடே ஊர்ந்து நடந்து ஓடிச் செல்லும் வண்டித் தடங்களை இனி காண முடியாது இன்று புல்லைத்  தின்று கொண்டிருக்கும் ஆடு, நாளை அந்த இடத்தை வெறுமையுடன் சந்திக்கும் மேலே பறக்கும் கழுகின் நிழல் கீழே கட்டாந்தரையில் பறப்பதை நாளை பார்க்க முடியாது இந்தக் குளத்தில் நாளை நீர் வந்து விடும் *****

>பேரிழப்பு – வல்லிக்கண்ணன்

> வல்லிக்கண்ணன் ‘இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய் விடவேண்டியது தான்!’ இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற்றியது. இவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அல்ல, முப்பதாயிரத்து ஓராவது தடவையாகவே இருக்கலாம்! பூவுலிங்கம் பட்டணத்துக்கு வந்து முப்பது வருஷங் கள் ஓடிவிட்டன. அவர் வந்த நாளிலிருந்து ‘ஊருக்கு ஒரு தரமாவது போயிட்டு வரணும்’ என்கிற ஆசையும் அவரது உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டது. அப்படி முப்பது வருஷ காலமாக … Continue reading

>பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையா

> பி.எஸ். இராமையா நாலைந்து வீடு தள்ளியிருந்த தெருமுனையிலிருந்து ஒரு நாய் ஊளையிட்ட சத்தம் வந்தது. இரவு மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். அருணாசல முதலியாரைச் சூழ்ந்திருந்த யாவரையும் அந்த ஊளை ஒரு குலுக்குக் குலுக்கியெடுத்தது. அறையில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வாசல் திண்ணையில் இருளில் உட்கார்ந்திருந்தவர்களும், வீட்டினுள் கூடத்தில் கூடி, சிரமத்துடன் மெளனம் பயின்ற பெண்மக்களும் திடுக்கிட்டுப் பார்த்தனர். திண்ணையில் இருந்த ஒருவர் நாயை விரட்ட எழுந்து போனார். … Continue reading

>லா.ச.ரா. என்றொரு மனவெளிக் கலைஞன் -வண்ணநிலவன்

> வண்ணநிலவன் அஞ்சலி: லா.ச. ராமாமிர்தம் (30.10.1916 – 30.10.2007) மணிக்கொடி காலத்தின் எஞ்சிய ஒரேயொரு நட்சத்திரமும் உதிர்ந்துவிட்டது. ‘லா.ச.ரா.’ என்று இலக்கிய உலகம் பிரியமாக அழைத்துவந்த லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் மறைந்துவிட்டார். அது ஒரு யுகம். அந்த யுகத்தின் கடைசி மூச்சும் இதோ ஒடுங்கிவிட்டது. புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., ந. பிச்ச மூர்த்தி, சிட்டி, சி.சு.செல்லப்பா, பி.எஸ். ராமையா, எம்.வி.வி. என்ற அந்த இலக்கியப் பாரம்பரியத்தின் எஞ்சியிருந்த விழுதுகளில் ஒன்று லா.ச.ரா. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் … Continue reading